close
Choose your channels

நகைக்கடைக்காரர் மகளுடன் அனிருத் திருமணம் உண்மையா?

Friday, March 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் இளம் இசைப்புயல் அனிருத் திருமணம் குறித்த செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. அனிருத் நகைக்கடை உரிமையாளர் ஒருவரது மகளை திருமணம் செய்யவிருப்பதாகவும், வரதட்சணையாக நவீன ரிகார்டிங் ஸ்டுடியோ ஒன்றை அவர் அனிருத்துக்கு கொடுக்கவிருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.


இந்நிலையில் இதுகுறித்து அனிருத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியபோது, 'இது முழுக்க முழுக்க வதந்தி. தவறான செய்தி. அனிருத் இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவில் இல்லை. எந்த நகைக்கடைக்காரர் உரிமையாளர் பெண்ணையும் அனிருத்துக்கு பேசி முடிக்கவில்லை' என்று கூறினர்.

இதுகுறித்து அனிருத் கூறியபோது, 'நான் ஒவ்வொரு நாளும் இரவில் ரிகார்டிங் பணிகளை முடித்துவிட்டு மதியம் தான் தூங்கி எழுவேன். நான் தூங்கி எழுந்ததும் என்னை பற்றிய ஏதாவது ஒரு வதந்தி பரவி வருகிறது. இதுபோன்ற வதந்திகளை ஏன் பரப்புகின்றனர் என்பதே தெரியவில்லை. இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.